search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசின் சாதனை"

    • உதவித் தொகை உயர்வு ஆகிய திட்டங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • அம்மா உணவகம் மற்றும் கணினி வரி வசூல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் மண்டலம்-3, குமரன் வணிகவளாகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க விளம்பரத்தட்டிகளை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்விளம்பரங்களில் நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம்,கட்டணமில்லா பேருந்து, காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மின்வாகனப் பூங்கா, கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழடிஅருங்காட்சியகம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், புதிய பேருந்துவாங்குதல், பழைய பேருந்து புதுப்பித்தல், விவசாய மின் இணைப்புகள், கலைஞர்நூற்றாண்டு நூலகம், தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) நவீன தரத்திற்குஉயர்த்துதல், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி,மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்வு ஆகிய திட்டங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் குமரன் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம்மற்றும் கணினி வரி வசூல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், "ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி" குறித்த சாதனை விளக்கவிளம்பரங்கள் மாநகராட்சி அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், கலைஞர்பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம்,மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மின்னணுத் திரைகளில் பொது மக்கள் அறிந்துபயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்(பொறுப்பு) கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 428 பயனாளிகளுக்கு, 2.96 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்க ப்பட்டது.
    • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உணவு திருவிழாவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    திருப்பூர் :

    தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி, திருப்பூர் மத்திய பஸ் நடைபெற்று வருகிறது.

    கண்காட்சி

    திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியில், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், 428 பயனாளிகளுக்கு, 2.96 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்க ப்பட்டது. கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கண்காட்சியை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார், திட்ட இயக்குனர் லட்சுமணன், தனிதுணை கலெக்டர் அம்பாயிரநாதன், போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கோவிந்த சாமி, கோவிந்தராஜ், பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உணவு திருவிழா- கலைநிகழ்ச்சிகள்

    வருவாய்த்துறை, பட்டு வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், 'தாட்கோ' திட்டம், தொழிலாளர் நலவாரியம் சார்பில் நல உதவி வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உணவு திருவிழாவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 23ம் தேதி வரை, மத்திய பஸ் ஸ்டாண்டில் நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டி ருந்த புகைப்படங்கள் உள்ளன.
    • அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் - 48 திட்டம். விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை விளக்கி கண்காட்சியில் புகைப்படம் இடம் பெற்றுள்ளன.

    கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம். நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம். காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது.

    மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது.

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டி ருந்த புகைப்படங்கள் உள்ளன.

    இதனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×